இடிந்து விழுந்த அடுக்குமாடி / கர்ப்பிணியை மீட்கும் காவல் துறையினர் 
தமிழ்நாடு

கனமழை: சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து!

தொடர் கனமழையின் காரணமாக சென்னை ராஜாமங்கலம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது.

DIN

தொடர் கனமழையின் காரணமாக சென்னை ராஜாமங்கலம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது.

சென்னை ராஜமங்கலம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான ராஜாஜி நகர் 2வது தெருவில் பழமையான அடுக்குமாடி குடியிருப்பு இன்று (அக். 16) இடிந்து விழுந்தது.

இதையும் படிக்க | சென்னை, 3 மாவட்டங்களுக்கு நாளை (அக்.16) அரசு விடுமுறை! அத்தியாவசிய சேவைகள் இயங்கும்!

வீட்டில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக நேற்று காலி செய்துவிட்டுச் சென்றதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

எனினும், இடிந்து விழுந்த வீட்டின் அருகில் உள்ள மற்றொரு வீட்டின் படிக்கட்டு உடைந்து விழுந்தது. இதில், 5 மாத கர்ப்பிணி பெண் உள்பட 3 பேர் சிக்கிக்கொண்டனர். உடனே தகவல் அறிந்து விரைந்து சென்ற ராஜமங்கலம் காவல் நிலைய போலீசார் மூவரையும் பத்திரமாக மீட்டனர்.

உடனடியாக விரைந்து செயல்பட்ட ராஜமங்கலம் உதவி ஆய்வாளர் அபிநயா தலைமையிலான காவல் துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

SCROLL FOR NEXT