முகப்பு
இந்தியா

தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

தில்லியில் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து பற்றி..

Updated On : 18 மார்ச், 2026 at 8:51 AM
தில்லியில் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து
பகிர்:

தில்லியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர்.

தென்மேற்கு தில்லியில் 'பாலம்' பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் இன்று (மார்ச் 18) காலை 7 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக 30 தீயணைப்புப் படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர்.

குடியிருப்புப் பகுதி என்பதால் வீட்டில் இருந்த 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். தீயில் இருந்து தப்பிக்க மேல் மாடியில் இருந்து குதித்த இருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர், மேலும் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் ரேகா குப்தா இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

summary

9 Killed Including 3 Children, In Fire At Building In Delhi Palam area

முழு கட்டுரையைப் படிக்க →