உ.பி. காஸியாபாத் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பற்றி...
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத் நகரம் இந்திராபுரம் பகுதியில் உள்ள கௌர் க்ரீன் அவென்யூ அடுக்குமாடி குடியிருப்பில் இன்று(புதன்கிழமை) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 5 முதல் 6 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் பாதிப்பு குறித்த முழு விவரங்கள் தெரியவில்லை.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் இல்லை.
Advertisement
Advertisement
குடியிருப்பில் இருந்த சிலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் 17க்கும் மேற்பட்ட தீயணைக்கும் வாகனங்கள் பணியில் இருந்ததாகவும் தீயணைப்புத் துறை அதிகாரி ராகுல் குமார் தெரிவித்தார்.
தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து குறித்து விசாரணை நடத்தவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
Massive fire breaks out at Ghaziabad apartment in UP, fire tenders rush to spot
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.