முகப்பு
தமிழ்நாடு

தவெக மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமா?

தொடர் கனமழையால் தவெக மாநாடு நடைபெறும் இடம் சேறும் சகதியுமாக இருப்பதால் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமா? என்று கேள்வி எழும்பியுள்ளது.

Updated On : 15 அக்டோபர் 2024, 12:07 pm IST
தவெக மாநாடு நடைபெறும் இடம்.
பகிர்:

தொடர் கனமழையால் தவெக மாநாடு நடைபெறும் இடம் சேறும் சகதியுமாக இருப்பதால் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமா? என்று கேள்வி எழும்பியுள்ளது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக். 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது.

மாநாட்டுப் பணிகள், கடந்த 4-ஆம் தேதி பந்தல் கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய நிலையில், பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாநாடு தொடா்பாக 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தவெக மாநில மாநாடு நடைபெறும் இடத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக சேறும் சகதியுமாகக் காணப்படுகிறது.

தொடர்ந்து அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மேலும் தண்ணீர் தேங்கும் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் வருகிற 27 ஆம் தேதி மாநாடு நடைபெறுமா? என்ற கேள்வி எழும்பியுள்ளது.

தவெக மாநாடு தேதி ஏற்கனவே ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments