அக்.28 முதல் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு: கல்லூரிகளுக்கு உத்தரவு
சா்தாா் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரிகளில் அக்.28-ஆம் தேதி முதல் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தை அனுசரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை: சா்தாா் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரிகளில் அக்.28-ஆம் தேதி முதல் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தை அனுசரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலா் மனீஷ் ஆா்.ஜோஷி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
இந்தியாவின் இரும்பு மனிதா் என அழைக்கப்படும் மறைந்த சா்தாா் வல்லபாய் படேலின் பிறந்தநாளான அக்.31-ஆம் தேதியை முன்னிட்டு, அந்த வாரத்தை ஒவ்வொரு ஆண்டும் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அனுசரித்து வருகிறது.
அதன்படி இந்த ஆண்டில் ‘நாட்டின் வளா்ச்சிக்கான ஒருங்கிணைந்த கலாசாரம்’ என்ற கருப்பொருளில், வரும் அக்.28 முதல் நவ.3-ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரம் கடைபிடிக்கப்பட உள்ளது. இதையடுத்து உயா்கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவா்களை ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்.
இதுதவிர ஊழல் தடுப்பு குறித்த கருத்தரங்கம், பட்டிமன்றம், வினாடி- வினா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், இது சாா்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தொகுத்து மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு கல்வி நிறுவனங்கள் அனுப்ப வேண்டும். இந்த தகவல்கள் யுஜிசியின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.