முகப்பு
தமிழ்நாடு

காட்பாடி அருகே விவேக் விரைவு ரயிலில் கோளாறு! ரயில் சேவை பாதிப்பு

விவேக் ரயில் என்ஜினுடன் பெட்டிகளை இணைக்கும் லாக்கர் உடைந்தது பற்றி...

Updated On : 25 அக்டோபர் 2024, 12:23 pm IST
காட்பாடி அருகே விவேக் விரைவு ரயிலில் கோளாறு - Din
பகிர்:

காட்பாடி அருகே சென்று கொண்டிருந்த விவேக் விரைவு ரயிலில் ஏற்பட்ட கோளாறால் ஒரு மணிநேரத்துக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்றுகொண்டிருந்த விவேக் விரைவு ரயில்(22504), காட்பாடி அருகே இன்று காலை 9 மணியளவில் சென்று கொண்டிருந்தது.

அப்போது என்ஜினுடன் பெட்டிகளை இணைக்கும் கப்ளிங் என்ற லாக்கர் உடைந்ததால், பெட்டிகள் தனியாக கழன்று என்ஜின் மட்டும் சிறிது தூரம் ஓடி நின்றது.

Advertisement

Advertisement

தண்டவாளத்தில் உடைந்து விழுந்த கப்ளிங். - Din

அசம்பாவிதம் தவிர்ப்பு

முகுந்த ராயபுரம் - திருவலம் இடையே பாலாற்றின் குறுக்கே இருக்கும் ரயில் பாலத்தை 20 கி.மீ. வேகத்தில் மட்டுமே ரயில்கள் கடக்க வேண்டும் என்பதால், ரயிலின் மெதுவாக இயக்கப்பட்ட சமயத்தில் லாக்கர் உடைந்துள்ளது. இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, ரயில்வே ஊழியர்கள் புதிய லாக்கரை கொண்டு வந்து பொறுத்திய பிறகு, ஒன்றரை மணிநேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.

இதனால், அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments