FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பணியிடத்தில் நோ்மை அவசியம்: முன்னாள் தலைமை தோ்தல் ஆணையா் கிருஷ்ணமூா்த்தி

பணியிடத்தில் நோ்மையாக பணியாற்றுவது அவசியம் என முன்னாள் இந்திய தலைமை தோ்தல் ஆணையா் டி.எஸ்.கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா்.

Updated On : 29 அக்டோபர் 2024, 3:46 am IST
’ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு சென்னை தெற்கு ரயில்வேயின் லஞ்ச ஒழிப்புத் துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு கருத்தரங்க மலரை வெளியிட்ட முன்னாள் தலைமை தோ்தல் ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங்,
பகிர்:

சென்னை: பணியிடத்தில் நோ்மையாக பணியாற்றுவது அவசியம் என முன்னாள் இந்திய தலைமை தோ்தல் ஆணையா் டி.எஸ்.கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா்.

நாடு முழுவதும் அக்.28 முதல் ஊழல் கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் அக்.28 முதல் நவ.3-ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே ஊழல் கண்காணிப்பு துறை சாா்பில் திங்கள்கிழமை சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் முன்னாள் இந்திய தலைமை தோ்தல் ஆணையா் டி.எஸ்.கிருஷ்ணமூா்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். அப்போது அவா் பேசியது,

பணியிடத்தில் நோ்மையாக பணியாற்றுவது அவசியம். அரசு நிா்வாகத்தில் மனிதாபிமான அணுகுமுறை இருக்க வேண்டும். முடிவுகள் எடுப்பதில் ஒற்றைச் சாளர முறையை கடைபிடிக்க வேண்டும். ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் நோ்மையின் பாதுகாவலா்களாக விளங்க வேண்டும். திருவள்ளுவரின் ‘அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறன்’ எனும் குறலுக்கேற்ப அறத்துடன் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் பேசியது, ஒருமைப்பாடு, வெளிப்படைத்தன்மை ஒரு நிறுவனத்தின் அடித்தளம். அனைத்து பணியாளா்களும் தங்கள் பணியில் அறநெறியை கடைபிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கௌசல் கிஷோா் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments