வெப்ப அலை மாநிலப் பேரிடராக அறிவிப்பு! ரூ.4 லட்சம் நிவாரணம்
வெப்ப அலையால் உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.4 லட்சம் நிவாரணம் -தமிழக அரசு
Updated On : 28 அக்டோபர், 2024 at 10:32 PM
வெப்ப அலையை மாநிலப் பேரிடராக அறிவித்து தமிழக அரசு இன்று(அக். 28) அரசாணை வெளியிட்டுள்ளது.
Updated On : 28 அக்டோபர், 2024 at 10:38 PM
வெப்ப அலையால் உயிரிழப்பு ஏற்பட்டால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் நிவரணத் தொகை அளிக்கப்படும். வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள், ஓஆர்எஸ் கரைசல் வழங்க மாநிலப் பேரிடர் நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், வெப்ப அலை தாக்கத்தின்போது தண்ணீர் பந்தல்கள் அமைத்து, குடிநீர் வழங்கவும் பேரிடர் நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.