அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு: ரயில்கள் தாமதம்!
அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறால் ரயில் சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றி...
அரக்கோணம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக விரைவு ரயில்கள், மின்சார ரயில்கள் சேவையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் ரயில் நிலையத்தில் சென்னை மார்க்கமாக செல்லக் கூடிய தண்டவாள இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புதன்கிழமை காலை சிக்னலில் பிரச்னை ஏற்பட்டது.
இதன்காரணமாக, அரக்கோணம் வழியே சென்னை செல்லக் கூடிய ரயில்கள் ஒரு மணிநேரத்துக்கு மேலாக நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க : தீபாவளி எண்ணெய் குளியல் நேரம்
சென்னைக்கு நாள்தோறும் பணிக்கு செல்லும் பயணிகள் அரக்கோணம் ரயில் நிலைய மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை வழியாக சொந்த ஊர்களுக்கு செல்ல பயணத் திட்டமிட்டுள்ள பயணிகளும் சிரமம் அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சிக்னல் கோளாறை ரயில்வே ஊழியர்கள் சரிசெய்த பின் தாமதமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.