60 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: மக்கள் அதிர்ச்சி!
புதிய உச்சத்தைத் தொட்டுள்ள தங்கம் விலை பற்றி...
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த வார இறுதியில் ரூ. 58,880-க்கு விற்பனை செய்த நிலையில், வாரத்தின் தொடக்க நாளான நேற்று மேலும் உயர்ந்தது.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்னும் விலை உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, புதன்கிழமையான இன்று காலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 520 அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இன்றைய தங்கம் விலை
சென்னையில் புதன்கிழமை காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ. 59,520-க்கும், ஒரு கிராம் ரூ. 7,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 63,560-க்கும், ஒரு கிராம் ரூ. 7,945-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றை நிலவரம்
சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ. 59,000-க்கும், ஒரு கிராம் ரூ. 7,375-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 63,040-க்கும், ஒரு கிராம் ரூ. 7,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
இந்த நிலையில், தங்கத்துக்கு போட்டிபோட்டுக் கொண்டு வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
அதன்படி, கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து, ரூ. 109-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி விலை ரூ. 1,09,000-க்கு விற்பனையாகிறது.
கடந்த அக். 23-ஆம் தேதி வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.