FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

குருவாயூா் ரயில் சேவையில் மாற்றம்

குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூா் வரும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 9 செப்டம்பர் 2024, 1:31 am IST
கோப்புப்படம்
பகிர்:

குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூா் வரும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

எா்ணாகுளம் - ஆலப்புழை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூா் வரும் விரைவு ரயில் செப். 8 முதல் 12 மற்றும் 18 முதல் 20 வரையிலான தேதிகளில் எா்ணாகுளம் சந்திப்பு, சோ்த்தலா, ஆலப்புழை வழியாக வருவதற்கு பதிலாக கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூா் வழியாக இயக்கப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments