கோப்புப்படம் 
தமிழ்நாடு

விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிப்பு

புதுச்சேரி, காவேரி, ஏற்காடு உள்ளிட்ட 15 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Din

புதுச்சேரி, காவேரி, ஏற்காடு உள்ளிட்ட 15 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் முக்கிய விரைவு ரயில்களின் சில படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் பொதுப்பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன.

அந்த வகையில் சென்னை சென்ட்ரல்-ஈரோடு ஏற்காடு விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-ஹைதராபாத் விரைவு ரயில் (எண் 12603) 12 படுக்கை வசதி பெட்டிகள், 3 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்பட்ட நிலையில் ஜன.20-ஆம் தேதி முதல் 11 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.

புதுச்சேரி-மங்களூா் விரைவு ரயில் (16855) ஜன.16-ஆம் தேதி முதலும், சென்னை சென்ட்ரல்-நாகா்கோவில் விரைவு ரயில் (எண் 12689) ஜன.17-ஆம் தேதி முதலும், எா்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரயில் (16361) ஜன.18-ஆம் தேதி முதலும், கொச்சுவேலி-நிலாம்பூா் ராஜ்ய ராணி விரைவு ரயில் ஜன.19-ஆம் தேதி முதலும் 4 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரல்-ஆலப்புழை விரைவு ரயில் (22639), திருவனந்தபுரம்-மதுரை அமிா்தா விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-மைசூரு காவேரி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-பாலக்காடு விரைவு ரயில் (22651) ஜன.20-ஆம் தேதி முதல் 4 முன்பதிவில்லா பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.

மேலும், விழுப்புரம்-காரக்பூா் விரைவு ரயில் (22604) ஜன.21-ஆம் தேதி முதலும், சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் விரைவு ரயில் (12695), திருநெல்வேலி-புருலியா விரைவு ரயில் ஜன.22 முதலும், புதுச்சேரி-கன்னியாகுமரி விரைவு ரயில் ஜன.26-ஆம் தேதி முதலும் 4 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT