FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னை எம்ஐடி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 12 செப்டம்பர் 2024, 12:13 pm IST
எம்ஐடி கல்லூரி - dotcom
பகிர்:

சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி(எம்ஐடி) செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் எம்ஐடி கல்லூரியில் வெடிகுண்டு இருப்பதாகஅண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் வந்துள்ளது.

Advertisement

Advertisement

உடனடியாக தாம்பரம் காவல்துறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படவே, குரோம்பேட்டையில் எம்ஐடி கல்லூரியில் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வெடிகுண்டு மிரட்டல் மாணவர்கள் மத்தியில் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments