கோப்புப் படம் 
தமிழ்நாடு

நாளை(செப்.14) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழகம் முழுவதும் சனிக்கிழமையான நாளை(செப்.14) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழகம் முழுவதும் சனிக்கிழமையான நாளை(செப்.14) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் குரூப் 2 தோ்வு சனிக்கிழமை (செப்.14) நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 7.93 லட்சம் போ் எழுதுகின்றனா். தோ்வுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் விடியோ பதிவு செய்ய அரசுப் பணியாளா் தோ்வாணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நடைபெறவுள்ளதையொட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை (செப். 14) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2024-25ம் கல்வியாண்டுக்கான நாட்காட்டியில் திருத்தம் வெளியிடப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

நாளை (14.09.2024) சனிக்கிழமை அன்று விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. தங்கள் ஆளுகைக்கு கீழ் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இவ்விவரத்தினை தெரிவித்திட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT