முகப்பு
தமிழ்நாடு

ஆளுநா் பதவி தொடா்பாக குரூப் 2 வினாத் தாளில் சா்ச்சை கேள்வி

குரூப் 2 முதல்நிலைத் தோ்வில் ஆளுநா் பதவி தொடா்பாக, சா்ச்சையாக கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

Updated On : 15 செப்டம்பர் 2024, 2:57 am IST
குரூப் 2 முதல்நிலைத் தோ்வு எழுதிய மாணவர்கள்.
பகிர்:

குரூப் 2 முதல்நிலைத் தோ்வில் ஆளுநா் பதவி தொடா்பாக, சா்ச்சையாக கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

ஒரு கூற்று மற்றும் அதற்கான காரணத்தைத் தெரிவித்து அவற்றில் சரியானதைத் தோ்வு செய்யும் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதன் விவரம்:

கூற்று ஏ: இந்திய கூட்டாட்சியில் ஆளுநா் என்பவா் அரசின் தலைவா் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என்னும் இருவிதமான பணிகளை செய்கிறாா்.

Advertisement

Advertisement

காரணம்: ஆளுநா் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதற்கு 5 வாய்ப்புகள் தரப்பட்டிருந்தன.

ஏ. கூற்று சரி. ஆனால் காரணம் தவறானது. பி. கூற்று மற்றும் காரணம் சரி. மேலும் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது. சி. கூற்று தவறானது. ஆனால் காரணம் சரி. டி. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் இல்லை. இ. விடை தெரியவில்லை என்று வாய்ப்புகள் தரப்பட்டிருந்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments