முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆளுநர் பதவி பயனற்றது: திமுக

ஆளுநரின் பதவி குறித்து திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை பேசியது பற்றி....

Updated On : 6 மார்ச், 2026 at 2:48 PM
திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை - X | Saravanan Annadurai
பகிர்:

ஆளுநர் பதவி பயனற்றது என திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கூறியுள்ளார்.

மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் வியாழக்கிழமை (மார்ச் 5) திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, மேற்கு வங்கத்துக்கான புதிய ஆளுநராக தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி நியமிக்கப்பட்டாா்.

இது குறித்து திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை பேசுகையில், “ஆளுநர் பதவி பயனற்றது. மாநில அரசாங்கத்துக்கு எதற்கு ஆளுநர்? அவர் மத்திய அரசின் முகவராகவும், அரசியலமைப்புக்கு எதிராகவும் செயல்படுகிறார். ஆளுநர் ஆா்.என். ரவி இடமாற்றம் செய்யப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சிதான்” என்று தெரிவித்தார்.

Advertisement

தமிழகத்துக்குப் பொறுப்பு ஆளுநராக, கேரள மாநில ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் கூடுதலாகப் பதவி வகிப்பாா் என குடியரசுத் தலைவா் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

DMK spokesperson Saravanan Annadurai has said that the post of Governor is useless.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.