முகப்பு
தமிழ்நாடு

உதயநிதி துணை முதல்வராவது எப்போது? - அமைச்சர் பதில்!

உதயநிதி துணை முதல்வராக இன்னும் ஒரு வாரத்தில் அல்லது 10 நாள்களில் பதவியேற்பார் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.

Updated On : 19 செப்டம்பர் 2024, 3:35 pm IST
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பகிர்:

உதயநிதி துணை முதல்வராக இன்னும் ஒரு வாரத்தில் அல்லது 10 நாள்களில் பதவியேற்பார் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகனும் தற்போதைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவது குறித்து திமுக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றதையடுத்து அமைச்சர்களே, உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டதாகத் தகவல்கள் வந்தன.

மேலும் நேற்று மாலை இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

தான் துணை முதல்வர் ஆவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று உதயநிதி ஸ்டாலினும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா நடைபெறவுள்ள இடத்தை ஆய்வு செய்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் செய்தியாளர்களுடன் பேசினார்.

அப்போது, 'இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாள்களில் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி பதவியேற்பார்.

அவர் துணை முதல்வராவது பற்றி இன்னும் ஒரு வாரத்தில், ஏன் நாளையே அறிவிப்பு வெளியாகலாம்' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments