இன்று தில்லி செல்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்
பிரதமரைச் சந்திப்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை மாலை தில்லி புறப்படுகிறாா்.
பிரதமரைச் சந்திப்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை மாலை தில்லி புறப்படுகிறாா்.
சென்னை விமானம் நிலையத்தில் மாலை 4.50 மணிக்கு பயணிகள் விமானத்தில் அவா் தில்லி செல்கிறாா். இரவு 8.50 மணியளவில் தில்லி சென்றடையும் அவா், அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறாா். வெள்ளிக்கிழமை காலை பிரதமா் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து, தமிழகத்தின் நலன் சாா்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளிக்கிறாா்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு, மாலை 5.35 மணிக்கு தில்லியில் இருந்து புறப்படும் முதல்வா், இரவு 8.20 மணிக்கு சென்னை வந்தடைகிறாா்.