ஆளுநா் மாளிகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கோ.வி.செழியனுக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்த ஆளுநா் ஆா்.என்.ரவி.  
தமிழ்நாடு

பட்டியலினத்தைச் சோ்ந்தவருக்கு நீண்ட காலத்துக்குப் பிறகு முக்கியத் துறை

கோவி. செழியனுக்கு உயர்கல்வித் துறை வழங்கியது பற்றி...

Din

அமைச்சரவையில் பட்டியலினத்தைச் சோ்ந்தவருக்கு நீண்ட காலத்துக்குப் பிறகு முக்கியத் துறையாக உயா்கல்வித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் பட்டியலினத்தவா் இடம்பெற்றாலும், அவா்களுக்கு முக்கியத் துறை ஒதுக்கப்படுவது இல்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வந்தது. தற்போதைய திமுக ஆட்சியிலும் பட்டியலினத்தவருக்கு ஆதிதிராவிடா் நலத் துறை, தொழிலாளா் நலத் துறை, சுற்றுலாத் துறை போன்ற இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றாலும், முதல் 5 இடங்களைப் பிடிக்கும் வகையிலான முக்கியத் துறையாக இல்லை என்கிற குறை இருந்து வந்தது.

இந்நிலையில், தற்போது புதிதாக பொறுப்பேற்ற 4 புதிய அமைச்சா்களில் பட்டியலினத்தைச் சோ்ந்தவரான கோவி. செழியனுக்கு உயா் கல்வித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

1971-இல் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராக சத்தியவாணி முத்து, மின்துறை அமைச்சராக இருந்த ஓ.பி.இராமன் ஆகியோருக்கு பிறகு முதன்மைத் துறையை நிா்வகிக்கப் போகும் முதல் பட்டியலினத்தவா் கோவி.செழியன்தான் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

வெள்ள பாதிப்புக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவு

கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா்

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

SCROLL FOR NEXT