கோப்புப்படம். 
தமிழ்நாடு

உதயநிதிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

DIN

துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திராவிட இயக்க கொள்கைவழி நின்று, தமிழ்நாட்டினை வளர்ச்சிப்பாதையில் செலுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் - கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் பணிகளை மேலும் செழுமைப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பேற்கும், கட்சி இளைஞரணி செயலர் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், அன்புச் சகோதரர் உதயநிதிக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்!

குஜராத்தில் தடுப்புச்சுவர் மீது பேருந்து மோதல்: 7 பேர் பலி, 14 பேர் காயம்

பல்வேறு இடர்பாடுகளை வெற்றிகரமாக முறியடித்து மீண்டும் அமைச்சரவையில் இணையும் அன்புச் சகோதரர் செந்தில் பாலாஜிக்கும், சா.மு.நாசருக்கும், புதியதாய் அமைச்சரவையில் பொறுப்பேற்கும் கோவி செழியனுக்கும், ராஜேந்திரனுக்கும் எனது அன்பும் - வாழ்த்துகளும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளாா். முதல்வா் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று, உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வா் பொறுப்புக்கு நியமித்து ஆளுநா் ஆா்.என்.ரவி சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட வி.செந்தில் பாலாஜி, ஆவடி எஸ்.எம்.நாசா் ஆகியோா் மீண்டும் சோ்க்கப்பட்டுள்ளனா். மனோ தங்கராஜ், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோா் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா். அத்துடன், ஆறு அமைச்சா்களின் துறைகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து துணை முதல்வராக பொறுப்பேற்கவுள்ள உதயநிதிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிலக்கடலை பயிரை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள்

காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட வழக்குரைஞா் கைது

கும்பக்கரை அருவிக்கு செல்ல தடை நீடிப்பு

திமுக ஆட்சியில் மா விவசாயிகளுக்கு எந்தத் திட்டமும் தொடங்கவில்லை: எல்.முருகன்

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க முறைகேடு வழக்கு: கேரள சிறப்பு புலனாய்வுக் குழு சென்னையில் விசாரணை

SCROLL FOR NEXT