முகப்பு
தமிழ்நாடு

தடையை மீறி போராட்டம்: தவெகவினர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் தடையை மீறி, போராட்டம் நடத்தியதாக தமிழக வெற்றிக் கழகத்தினர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Updated On : 4 ஏப்ரல், 2025 at 3:58 PM
தவெகவினர் ஆர்ப்பாட்டம்
பகிர்:

சென்னையில் தடையை மீறி, போராட்டம் நடத்திய தமிழக வெற்றிக் கழகத்தினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வக்ஃபு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், சென்னையில் மொத்தம் 18 இடங்களில் போராட்டம் நடத்திய 2000 தவெகவினர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் சமூக-மத ரீதியிலான பணிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்படும் வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் நோக்கில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டு திருத்தங்களுடன் மீண்டும் இரு அவைகளிலும் தாக்கல் செய்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

இந்த நிலையில், வக்ஃபு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →