FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இபிஎஸ் இல்லத்தில் அமித் ஷாவுக்கு தேநீர் விருந்து!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா சென்றுள்ளார்.

Updated On : 11 ஏப்ரல் 2025, 6:02 pm IST
இபிஎஸ் இல்லத்தில் அமித் ஷா.
பகிர்:

அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா சென்றுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று கூட்டணி உறுதியாகியுள்ளது.

சென்னை வந்துள்ள அமித் ஷா இன்று பல்வேறு தலைவர்களைச் சந்தித்துப் பேசிய நிலையில் இறுதியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்துப்பேசினார்.

Advertisement

Advertisement

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, தமிழகத்தில் 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக இணைந்து போட்டியிட உள்ளதாகவும் தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும் தமிழக அளவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் கூட்டணி அமைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும் 2026 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு அமைச்சர் அமித் ஷா வருகை தந்துள்ளார். அங்கு அமித் ஷா உள்ளிட்ட பாஜகவினருக்கு தேநீர் விருந்து அளிக்கப்படுகிறது.

அதிமுகவின் முக்கிய தலைவர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

அமித் ஷாவின் வருகையையொட்டி இபிஎஸ் இல்லத்தில் மத்திய ரிசர்வ் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments