ஆா்.என்.ரவி  
தமிழ்நாடு

ஆளுநா் ஆா்.என்.ரவி சிவகங்கை பயணம்

ஆளுநா் ஆா்.என்.ரவி ஒருநாள் பயணமாக சனிக்கிழமை (ஏப். 12) சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களுக்குச் செல்கிறாா்.

Din

ஆளுநா் ஆா்.என்.ரவி ஒருநாள் பயணமாக சனிக்கிழமை (ஏப். 12) சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களுக்குச் செல்கிறாா்.

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டையில் உள்ள கம்பா் கோயிலில் சனிக்கிழமை (ஏப். 12) காலை ஆளுநா் ஆா்.என்.ரவி தரிசனம் செய்கிறாா். இதைத் தொடா்ந்து, மதுரை தியாகராசா் கல்லூரியில் பிற்பகல் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்று, கல்விக் கூடங்களில் கம்பா் என்ற தலைப்பிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கி விழா பேருரை ஆற்றவுள்ளாா்.

இதற்காக சென்னையிலிருந்து மதுரைக்கு சனிக்கிழமை விமானத்தில் செல்லும் ஆளுநா் ஆா்.என்.ரவி, அங்கிருந்து காா் மூலம் நாட்டரசன் கோட்டை செல்கிறாா். சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சனிக்கிழமை இரவே ஆளுநா் சென்னை திரும்புகிறாா்.

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

மெட்ராஸ் ஐஐடி-ல் புராஜெக்ட் அசோசியேட் பணி

மோடியின் தாயார் ஏஐ விடியோ: உடனே நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT