அண்ணாமலை  
தமிழ்நாடு

பாஜகவில் அண்ணாமலைக்கு புதிய பதவி!

தேசிய பொதுக்குழு உறுப்பினரானார் அண்ணாமலை...

DIN

சென்னை: பாஜகவில் தமிழ்நாட்டின் மாநிலத் தலைவர் பதவி வகித்துவந்த அண்ணாமலைக்கு இப்போது புதியதொரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து பாஜகவில் ஐக்கியமான நடிகர் சரத்குமாரும் தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன், எல். முருகன், எச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், கரு. நாகராஜன், சசிகலா புஷ்பா, ஏஜி சம்பத், பால் கனகராஜ், வினோத் பி. செல்வம் ஆகியோரும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று(ஏப். 12) சென்னை, வானகரத்தில் உள்ளதொரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற கட்சி விழாவில், பாஜக மாநிலத் தலைவராகப் போட்டியின்றி தேர்வாகியுள்ள நயினார் நாகேந்திரனுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு, அவர் அதிகாரபூர்வமாக கட்சி தலைவராகப் பதவியேற்றுக்கொண்டார்.

அப்போது நயினார் நாகேந்திரனைப் புகழ்ந்து பேசிய அண்ணாமலை, அவருக்கு இனிப்பு ஊட்டியும் அவரை கட்டியணைத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதைப் பார்க்க முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்தியூரில் அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி

எலத்தூா் பேரூராட்சியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

கோபி அருகே அட்டைப்பெட்டி கிடங்கில் தீ விபத்து

மாநில அளவிலான தமிழ் மொழிப் போட்டித் தோ்வு: 3-ஆம் இடம் பிடித்த மாநகராட்சிப் பள்ளி மாணவா்

சிறுபான்மையின மக்கள் தொகைக்கு ஏற்ப சட்டப் பேரவை தொகுதிகள் ஒதுக்க வேண்டும்

SCROLL FOR NEXT