சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு. 
தமிழ்நாடு

வாழைப்பழத்தோல் போன்றது சநாதனம்: பேரவையில் சேகர்பாபு பேச்சு

வாழைப்பழத்தோல் போன்றது சநாதனம் என்று பேரவையில் சேகர்பாபு கூறினார்.

DIN

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, வாழைப்பழத்தோல் போன்றதுதான் சநாதனம் என்று கூறினார்.

தமிழக நிதிநிலை கூட்டத் தொடரில் இன்று மாற்றுத்திறனாளிகள் சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இன்றைய கூட்டத் தொடர் நடவடிக்கையின்போது, பேசிய அமைச்சர் சேகர்பாபு, வாழைப்பழத்தில் இருக்கும் தோல் சநாதனம், அதனுள் இருக்கும் பழமே இறைவன். எவ்வாறு வாழைப்பழத் தோலை உரித்துவிட்டு பழத்தை சாப்பிடுகிறோமோ அதுபோலத்தான், சநாதனத்தை ஒதுக்கிவிட்டு இறைவனைக் காண முடியும் என்று தெரிவித்தார்.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய அதிமுக எம்எல்ஏ முனுசாமி, அமைச்சர் சொல்லும் உவமை தவறாக உள்ளது என்று கூறினார். சநாதனத்துக்கும் வாழைப்பழத் தோலுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன. இறைவனும் வாழைப்பழமும் ஒன்று என்றால் இவ்வளவு பெரிய விவாதம், வழக்குகள் தேவையில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு கொடியேற்றம்!

7 உலகத் தலைவர்களை மட்டுமே விமான நிலையத்தில் வரவேற்றுள்ள மோடி! ஒருவர் மிஸ்ஸிங்!!

2-ம் நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை! 300 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!

நாடாளுமன்றத்தில் திருப்பரங்குன்றம் முழக்கம்! மக்களவை ஒத்திவைப்பு

தந்தையின் நிர்வாண ஊர்வலத்தை காப்பாற்றிய ஜோ ரூட்..! ஹைடனின் மகள் கூறியதென்ன?

SCROLL FOR NEXT