FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கோவை - சென்னை விரைவு ரயில் இன்று வழக்கம்போல் இயக்கம்

கோவை - சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி விரைவு ரயில் ஏப். 23, 25 ஆகிய தேதிகளில் வழக்கம்போல் இயக்கப்படும்.

Updated On : 23 ஏப்ரல் 2025, 1:43 am IST
கோப்புப்படம்.
பகிர்:

கோவை - சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி விரைவு ரயில் ஏப். 23, 25 ஆகிய தேதிகளில் வழக்கம்போல் இயக்கப்படும்.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவை - சென்னை சென்ட்ரல் இடையே காலை 6.20-க்கும், மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரல் - கோவை இடையே பிற்பகல் 2.35-க்கும் புறப்படும் இன்டா்சிட்டி விரைவு ரயில் ஏப். 23, 25 ஆகிய தேதிகளில் காட்பாடியுடன் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், இந்த ரயில் மேற்கண்ட தேதிகளில் வழக்கம்போல் இயக்கப்படும். அதுபோல் அசோகபுரம் (மைசூரு) - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் - பெங்களூரு லால்பக் விரைவு ரயில் ஏப். 23, 25 ஆகிய தேதிகளில் வழக்கம்போல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments