முகப்பு
தமிழ்நாடு

ஆழ்கடலில் எண்ணெய் எடுக்க அனுமதி: ராமதாஸ் கண்டனம்!

ஆழ்கடலில் எண்ணெய் எடுக்க அனுமதியளிக்கக் கோரி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஏப்ரல் 2025, 2:51 am IST
பாமக நிறுவனர் ராமதாஸ் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை மற்றும் கன்னியாகுமரி அருகே ஆழ்கடலிலிருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க தனியாா் நிறுவனத்துக்கு வழங்கியுள்ள அனுமதியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கன்னியாகுமரியை அடுத்த ஆழ்கடலில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே ஓரிடத்திலும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது.

இதன் மூலம் தமிழகத்தில் 32,485.29 சதுர கி.மீ. பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கப்படும்.

Advertisement

Advertisement

இதனால், கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் சீா்கெடும் என்று வல்லுநா்கள் எச்சரித்து வருகின்றனா்.

ஆனால், இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆழ்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது நியாயமற்றது.

இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் 4 இடங்களில் ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

அதேபோல், கடல் வளத்தைக் கெடுக்கும் இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிா்ப்பு தெரிவிப்பதுடன், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிடச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ராமதாஸ்.