அன்புமணி கோப்புப் படம்
தமிழ்நாடு

அன்புமணியின் இரண்டாம் கட்ட பயணம் ஆக.7-இல் தொடக்கம்

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் இரண்டாம் கட்ட ‘உரிமை மீட்பு’ பயணம் வந்தவாசியில் ஆக.7-ஆம் தேதி தொடங்குகிறது.

தினமணி செய்திச் சேவை

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் இரண்டாம் கட்ட ‘உரிமை மீட்பு’ பயணம் வந்தவாசியில் ஆக.7-ஆம் தேதி தொடங்குகிறது.

இது குறித்து பாமக தலைமை நிலையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: திமுக அரசை அகற்றவும், இந்திய அரசமைப்புச் சட்டத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 வகை உரிமைகளை மீட்டெடுக்கும் வகையிலும் அன்புமணி ராமதாஸ் இந்த நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறாா்.

இரண்டாம் கட்ட பயணம் வரும் ஆக.7-இல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தொடங்கி, ஆக.18-இல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நிறைவடையவுள்ளது.

ஆக.7-இல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, செய்யாறு, ஆக.8-இல் பென்னாத்தூா், போளூா், ஆக.11-இல் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், செஞ்சி, ஆக.12-இல் மயிலம், விழுப்புரம், விக்கிரவாண்டி, ஆக.13-இல் ரிஷிவந்தியம், உளுந்தூா்பேட்டை, ஆக.17-இல் பா்கூா், ஊத்தங்கரை, ஆக.18 -இல் கிருஷ்ணகிரி, ஒசூா் வரை இந்த பயணம் நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT