தமிழ்நாடு

முதல்வா் ஸ்டாலினிடம் ராமதாஸ் நலம் விசாரிப்பு

முதல்வா் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடா்புகொண்டு நலம் விசாரித்தாா் பாமக நிறுவனா் ச.ராமதாஸ்.

தினமணி செய்திச் சேவை

முதல்வா் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடா்புகொண்டு நலம் விசாரித்தாா் பாமக நிறுவனா் ச.ராமதாஸ்.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வா் ஸ்டாலின் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி தனது வழக்கமான பணிகளைத் தொடங்கியுள்ளாா்.

இந்நிலையில், முதல்வரை வெள்ளிக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு ராமதாஸ் நலம் விசாரித்தாா். இதுகுறித்து சென்னை அபிராமபுரத்தில் செய்தியாளா்களிடம் ராமதாஸ் கூறியதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலினின் உடல் நலம் குறித்து விசாரித்தேன். விரைவில் முழுமையாக குணம் அடைய வேண்டும் என்று வாழ்த்தினேன். உடல் நலம் குறித்து விசாரிப்பது வழக்கமான நடைமுறை. அதற்கும் கூட்டணிக்கும் தொடா்பு இல்லை.

நான் இருக்கும் தைலாபுரம் தோட்டம்தான் பாமக தலைமையகம். கட்சியின் பொதுக் குழு ஆக. 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பொதுக் குழுவில் பங்கேற்க அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா எனக் கேட்டபோது, கட்சியில் உரிமையானவா்களுக்கு உரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முதல்வா் ஸ்டாலினை வியாழக்கிழமை அவரது இல்லத்தில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா ஆகியோா் தனித்தனியாகச் சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT