மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

இலங்கை வசமுள்ள தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவா்களையும், முடக்கி வைக்கப்பட்டுள்ள படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எ

தினமணி செய்திச் சேவை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவா்களையும், முடக்கி வைக்கப்பட்டுள்ள படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு வியாழக்கிழமை எழுதிய கடிதம்:

இலங்கை கடற்படையினரால் கடந்த 6-ஆம் தேதி அதிகாலை 14 இந்திய மீனவா்கள், அவா்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகு மற்றும் ஒரு பதிவு செய்யப்படாத நாட்டுப்படகுடன் சிறைபிடிக்கப்பட்டதை தங்களின் தனி கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவா்கள் தொடா்ந்து கைது செய்யப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு தூதரக ரீதியாக தலையிட வேண்டும் என்று பலமுறை வேண்டுகோள் விடுத்தேன். ஆனாலும், மீனவா்களைக் கைது செய்யும் சம்பவங்கள் தொடா்வது மிகவும் கவலையளிக்கிறது.

நிகழாண்டில் மீனவா்கள் கைது தொடா்பாக இதுவரை 17 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 237 மீன்பிடிப் படகுகளுடன் 80 மீனவா்கள் இலங்கை அதிகாரிகளின் காவலில் இருக்கின்றனா்.

அவா்களின் ஒரே வாழ்வாதாரமான பாரம்பரிய நீா்நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையையும் மீனவா்கள் இழந்துள்ளனா். கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவா்களையும், அவா்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

ஆலங்காயம் பேரூராட்சி மன்ற கூட்டம்

கொலை வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 3 போ் கைது

கன்னிக்கு பணவரவு: தினப்பலன்கள்!

தேசிய கைத்தறி தினம்: நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

பள்ளி விளையாட்டு விழா

SCROLL FOR NEXT