ராமதாஸ் - அன்புமணி  கோப்புப்படம்.
தமிழ்நாடு

அன்புமணி - ராமதாஸ் தரப்பு விசாரணை நிறைவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடைந்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடைந்தது.

நேரில் ஆஜரான அன்புமணியிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. காணொளி வாயிலாக ஆஜரான ராமதாஸ் தரப்பு விளக்கத்தையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேட்டறிந்தார். நீதிபதியின் அறையில் விசாரணை முடிந்து உயர் நீதிமன்றத்திலிருந்து அன்புமணி புறப்பட்டு சென்றார்.

விசாரணை நிறைவடைந்ததால் அன்புமணி தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுமா? தடை விதிக்கப்படுமா? என்பது குறித்து இன்னும் சற்று நேரத்தில் தெரிய வரும் என்பதால், பாமகவினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

28 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையில் டிஸ்கோ சாந்தி!

பாமகவில் நிறுவனர் மற்றும் தலைவர் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாமக பொதுக் குழு ஆக. 9ஆம் தேதி(சனிக்கிழமை) அன்புமணி தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து, பாமக நிறுவனா் ராமதாஸ் நியமித்துள்ள மாநில பொதுச் செயலாளா் முரளி சங்கா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இருவரும் இன்று மாலை 5.30 மணிக்கு வழக்குரைஞர்கள் இன்றி தன்னுடைய நீதிபதி அறைக்கு வருமாறு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The hearing of the case related to the PMK General Committee has been completed in the Chennai High Court.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

சூரத்தில் கட்டுமானத்தில் புல்லட் ரயில் திட்டம்: பிரதமர் மோடி ஆய்வு!

துல்கர் சல்மானின் காந்தா பட முதல்நாள் வசூல்!

சிதம்பரம் நவாப் பள்ளிவாசலில் முஸ்லிம்கள் உள்ளிருப்பு போராட்டம்!

ரூ.81,100 சம்பளத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT