முகப்பு
தமிழ்நாடு

கரையைக் கடந்த புயல் சின்னம்!

வங்கக்கடலில் நிலவிய புயல் சின்னம் கரையைக் கடந்தது தொடர்பாக..

Updated On : 19 ஆகஸ்ட், 2025 at 5:26 AM
பகிர்:

வங்கக்கடலில் நிலவிய புயல் சின்னம் தெற்கு ஒடிசா - தெற்கு சத்தீஸ்கர் இடையே கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடலில், வடக்கு ஆந்திரம்-தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரம்-தெற்கு ஒடிஸா கடற்கரை பகுதிகளில் வலுபெற்று அதே பகுதிகளில் நிலவியது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து செவ்வாய்கிழமை (ஆக.19) தெற்கு ஒடிஸா-தெற்கு சத்தீஸ்கர் இடையே கோபால் அருகே கரையைக் கடந்தது.

அடுத்த 6 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசா தெற்கு சத்தீஸ்கர் வழியே நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தெற்கு கொங்கன்-வடக்கு கேரளம் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு-தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இது கரையைக் கடக்கும்பட்சத்தில் கேரள எல்லையில் தமிழக பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The India Meteorological Department has reported that the cyclone in the Bay of Bengal has crossed the coast between South Odisha and South Chhattisgarh.

முழு கட்டுரையைப் படிக்க →