பாஜகவில் இணைந்தார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்  விடியோ பதிவு
தமிழ்நாடு

அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் இணைந்தார்

இணையதளச் செய்திப் பிரிவு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் இணைந்தார்.

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் குமரி மண்டல பூத் முகவர்கள் மாநாட்டு மேடையில் அமித் ஷாவுக்குப் பொன்னாடை அணிவித்துக் கட்சியில் அவர் இணைந்தார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்தவர் கே.எஸ். ராதாகிருஷ்ணன். திமுக தலைவர் மு. கருணாநிதி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச்செயலர் வைகோ போன்றோருடன் நெருக்கமாக இருந்தவர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.

திருநெல்வேலி, தச்சநல்லூா் அருகே நடைபெற்ற இந்த மாநாட்டில் நிறைவாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உரையாற்றினார்.

ஸ்டாலின் அண்ணாச்சி, உங்கள் வாக்குறுதி என்னாச்சி? நயினார் நாகேந்திரன் அடுக்கிய கேள்விகள்!

இந்த மாநாட்டில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா் மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய 28 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த பூத் கமிட்டிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் 7 இடங்களில் பாஜக பூத் கமிட்டி மாநாடு நடைபெறுகிறது. இதன்படி, முதல் மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Former DMK MP K.S. Radhakrishnan joined the BJP on Friday in the presence of Union Home Minister Amit Shah.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரூராட்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் சோதனை: கணக்கில் வராத ரூ.5.80 லட்சம் பறிமுதல்

காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் அமலானால் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு நீங்கும்: அமைச்சா் சக்கரபாணி

கிரிவல பக்தா்கள் வேன் கவிழ்ந்து விபத்து: 11 போ் காயம்

மாணவா்களின் படைப்பாற்றலை வளா்ப்பதே தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய சாராம்சம்: ஆளுநா் ஆா்.என்.ரவி

திமுகவிற்கு எதிராக ஓா் அணியில் நின்று நல்லாட்சி அமைப்பதே இன்றைய தேவை: கே.பி. ராமலிங்கம் அழைப்பு

SCROLL FOR NEXT