அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் இணைந்தார்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் இணைந்தார்.
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் குமரி மண்டல பூத் முகவர்கள் மாநாட்டு மேடையில் அமித் ஷாவுக்குப் பொன்னாடை அணிவித்துக் கட்சியில் அவர் இணைந்தார்.
திமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்தவர் கே.எஸ். ராதாகிருஷ்ணன். திமுக தலைவர் மு. கருணாநிதி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச்செயலர் வைகோ போன்றோருடன் நெருக்கமாக இருந்தவர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.
Advertisement
Advertisement
திருநெல்வேலி, தச்சநல்லூா் அருகே நடைபெற்ற இந்த மாநாட்டில் நிறைவாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உரையாற்றினார்.
ஸ்டாலின் அண்ணாச்சி, உங்கள் வாக்குறுதி என்னாச்சி? நயினார் நாகேந்திரன் அடுக்கிய கேள்விகள்!
இந்த மாநாட்டில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா் மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய 28 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த பூத் கமிட்டிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் 7 இடங்களில் பாஜக பூத் கமிட்டி மாநாடு நடைபெறுகிறது. இதன்படி, முதல் மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Former DMK MP K.S. Radhakrishnan joined the BJP on Friday in the presence of Union Home Minister Amit Shah.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.