விருத்தாசலம் அருகே பூவனூர் தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன் ! 8 மாணவர்கள் காயம்
பூவனூரில் ரயில் தண்டவாளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் 8 மாணவர்கள் காயமடைந்தனர்.
பூவனூரில் ரயில் தண்டவாளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் 8 மாணவர்கள் காயமடைந்தனர்.
விருத்தாசலம் அருகே பூவனூரில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பள்ளி வேனில் பயணித்த 8 மாணவர்கள் காயமடைந்தனர்.
Advertisement
Advertisement
கோவையில் வனத் துறையினரின் வாகனத்தை தாக்கி கண்ணாடியை உடைத்த காட்டு யானை
அதிவேகத்தில் சென்றபோது பிரேக் பிடிக்காததால் தண்டவாள ஓரத்தில் இருந்த தடுப்பு கம்பியில் மோதி பள்ளி வேன் கவிழ்ந்தது. பொதுமக்கள் விரைந்து சென்று தண்டவாளத்தில் கவிழ்ந்த வேனை தூக்கி அகற்றினர்.
விபத்துக்குள்ளான நேரத்தில் அந்த வழியாக ரயில் ஏதும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
8 students injured in school van overturning on railway track in poovanur.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.