இபிஎஸ் பெரிய தலைவர் அல்ல: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல, அவருக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல, அவருக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுடன் பேசுகையில், ”எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல, அவருக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், என்னைப் பொறுத்தவரை நான் தெளிவாக உள்ளேன். தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு அளிப்பார்கள்’ என்றார்.
Advertisement
Advertisement
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் கோபி- சத்தி சாலையில் நல்லகவுண்டன்பாளையம் திருமால் நகரில் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பிரசார பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமை வகித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “கோபியில் உள்ள ஒருவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன் மனம் திறந்து பேட்டி கொடுத்தார். கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரை சந்தித்தார். தலைமைக்கு எதிராக பேட்டி கொடுத்ததால் கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவித்தோம்.
அதன்பின், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் விழாவுக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருடன் சென்றார். அதனால் அவர் அடிப்படை உறுப்பினர் என்பதிலும் இருந்து நீக்கப்பட்டார். கட்சிக்கு துரோகம் செய்ததால்தான் அவர் நீக்கப்பட்டார்” என்றார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி வைத்த விமர்சனத்துக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
இதையும் படிக்க: டிட்வா புயல்: நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு!
Former Minister Sengottaiyan has said that Edappadi Palaniswami is not a great leader and there is no need to answer to him.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.