புழல் ஏரி கோப்பிலிருந்து படம்
தமிழ்நாடு

கனமழை எதிரொலி: புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கக்கடலில் நிலவிய டித்வா புயல் வலுவிழந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய வட மாவட்டங்களில் கனமழைப்பொழிவை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஏரியில் இருந்து உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது. கரையோர பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனா். புழல் ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 2,200 கன அடியில் இருந்து 4,167 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சோழவரம் ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 289 கன அடியில் இருந்து 1,605 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 2,100 கன அடியில் இருந்து 2,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 400 கன அடியில் இருந்து 1,444 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

The water flow to Puzhal Lake has been increased from 2,200 cubic feet per second to 4,167 cubic feet per second.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"நாடகம் வேண்டாம்!" மோடி Vs கார்கே | செய்திகள்: சில வரிகளில் | 1.12.25

சென்னையில் திரளும் மேகக்கூட்டம்... மழை மேலும் அதிகரிக்கும்..!

இரண்டு விராட் கோலிகளை கவனித்திருப்பீர்கள்; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

ராயல் என்ஃபீல்ட் விற்பனை 22% அதிகரிப்பு!

அண்ணா, சென்னை பல்கலை. பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT