புனித நீர் கொண்டுவரப்படும் காட்சி 
தமிழ்நாடு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்: ஊர்வலமாக வந்தடைந்த புனித நீர்!

பல நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்திற்காக பல்வேறு நதிகளிலிருந்து எடுத்துவரப்பட்ட நீர் காஞ்சி கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்புப் பூஜைகளுக்குப் பின் ஊர்வலமாகப் புறப்பட்டு திருக்கோயிலை அடைந்தது.

பஞ்சபூத தலங்களில் ஒன்றானதும் கோயில் நகரின் பல நூற்றாண்டுகளைக் கண்ட சிறப்புமிக்க காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வரும் டிசம்பர் 8ஆம் தேதி காலை நடைபெற உள்ளது. திருக்கோயில் பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டம் அடைந்த நிலையில் யாகசாலை அமைக்கும் பணியும் நிறைவு பெற்றது.

இந்த நிலையில் யாகசாலையில் வைக்கப்படும் முக்கிய 5 கலசங்களுக்கான புனித நீர் பல்வேறு நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்டு காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் சிறப்புப் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, மேளதாளங்கள் கைலாய வாக்கியங்கள் முழங்க இரு குடைகள் நடுவே திருக்குடங்கள் ஊர்வலமாகக் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் திருக்கோயிலுக்குச் சென்றடைந்தது.

Kanchipuram Ekambaranathar Temple Maha Kumbabhishekam: Holy water arrived in procession!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கி ஊழியர் சங்கங்கள் போராட்டம்: வாடிக்கையாளர் சேவைக் குறைபாட்டைத் தவிர்க்க வங்கிகளுக்கு வலியுறுத்தல்

கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் போராட்டம்: ஆசிரியா்கள் முடிவு

சமபந்தி விருந்து...

பன்றித் தொல்லை; பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

குடியரசு தின விழா: தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா் ஆட்சியர்!

SCROLL FOR NEXT