முகப்பு
தமிழ்நாடு

ஈரோட்டில் விஜய் பிரசார கூட்டத்துக்கு அனுமதி

ஈரோட்டில் பெருந்துறை அருகே விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Updated On : 14 டிசம்பர், 2025 at 11:33 AM
தவெக தலைவர் விஜய்
பகிர்:

ஈரோட்டில் பெருந்துறை அருகே விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை இடத்தை பயன்படுத்திக்கொள்ள தவெக சார்பில் கட்டணம் செலுத்தப்பட்டதால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தவெக சார்பில் நிலத்தை பயன்படுத்த டெபாசிட் மற்றும் கட்டணமாக ரூ.1 லட்சம் செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, விஜயமங்கலம் சரளை பகுதியில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கிற பிரசார கூட்டம் வருகிற டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெகவினா் தோ்தல் பிரசார கூட்டம் நடத்த போலீஸாா் 84 கட்டுப்பாடுகளை விதித்துள்ளனா்.

ஓராண்டு கழித்து காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை!

எனவே, இவற்றை செயல்படுத்த கால அவகாசம் தேவைப்படுவதால், 16-ஆம் தேதிக்கு பதிலாக 18-ஆம் தேதி இந்தப் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ள தவெகவினா் முடிவு செய்துள்ளனா்.

விஜய் பிரசாரம் செய்யும் இடம் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது என விஜயபுரி அம்மன் கோயில் செயல் அலுவலர் மாவட்ட ஆட்சியர், காவல்துறையில் கடிதம் அளித்திருந்தார். இதனால் விஜய் பிரசார கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

summary

Permission has been granted for Vijay election campaign rally near Perundurai in Erode.

முழு கட்டுரையைப் படிக்க →