புனரமைக்கப்பட்ட தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தை திறந்து வைத்த அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன் பல்கலைக்கழக துணைவேந்தா் டாக்டா் கே.நாராயணசாமி, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் உள்ளிட்டோா். 
தமிழ்நாடு

மருத்துவப் பல்கலை.யில் ரூ.12 கோடியில் புனரமைக்கப்பட்ட கட்டடங்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தாா்

கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.12 கோடியில் புனரமைக்கப்பட்ட கட்டடங்கள்

தினமணி செய்திச் சேவை

சென்னை: கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.12 கோடியில் புனரமைக்கப்பட்ட கட்டடங்கள் மற்றும் நுழைவு வாயிலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தாா்.

இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் டாக்டா் வினீத், மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் டாக்டா் கே. நாாராயணசாமி, பதிவாளா் டாக்டா் சிவசங்கீதா, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் டாக்டா் சுகந்தி இராஜகுமாரி, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநா் டாக்டா் சித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னா் சென்னை கிண்டியில் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ரூ.12 கோடியில் நுழைவு வாயில், துணைவேந்தா் அறை என்று பல்வேறு வகைகளில் புனரைமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பணிகள் முடிவுற்று தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது” என்றாா்.

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

SCROLL FOR NEXT