தமிழகத்தின் குரூப் - 1 அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் அந்தஸ்து!
தமிழகத்தின் குரூப் - 1 அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டது பற்றி...
தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு குரூப் - 1 அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கி மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் - 1 தேர்வில் தேர்ச்சி பெற்று, பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு, அவர்களின் பணி மூப்பு அடிப்படையில், ஐஏஎஸ் அந்தஸ்தை மத்திய அரசு வழங்கும்.
இந்த நிலையில், 2024 ஜன., 1 முதல் டிச., 31 வரை காலியான பதவிகள் அடிப்படையில், தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் ராசிக் மற்றும் நல்லசிவன் ஆகியோருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
summary