முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தின் குரூப் - 1 அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் அந்தஸ்து!

தமிழகத்தின் குரூப் - 1 அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டது பற்றி...

Updated On : 23 டிசம்பர் 2025, 10:14 am IST
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு குரூப் - 1 அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கி மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் - 1 தேர்வில் தேர்ச்சி பெற்று, பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு, அவர்களின் பணி மூப்பு அடிப்படையில், ஐஏஎஸ் அந்தஸ்தை மத்திய அரசு வழங்கும்.

இந்த நிலையில், 2024 ஜன., 1 முதல் டிச., 31 வரை காலியான பதவிகள் அடிப்படையில், தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் ராசிக் மற்றும் நல்லசிவன் ஆகியோருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

summary

Group-1 officers in Tamil Nadu to be granted IAS status!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.