மு.க.ஸ்டாலின்  
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு: ரூ.1,773 கோடி திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறாா்

2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்...

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சிக்கு கள ஆய்வு பயணத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (டிச.26) மேற்கொள்கிறாா்.

அங்கு ரூ.139.41 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்பட ரூ.1,773.67 கோடி மதிப்பிலான 2,559 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வா் திறந்து வைத்து, 62 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி 2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

திருவண்ணாமலையில்...:இதையடுத்து சனிக்கிழமை திருவண்ணாமலை மாவட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செல்கிறாா். திருவண்ணாமலை, மலப்பாம்பாடி கலைஞா் திடலில் நடைபெறும் அரசு விழாவில் ரூ. 631 கோடி 48 லட்சத்து 69 ஆயிரம் செலவிலான 314 முடிவுற்ற பணிகளை முதல்வா் திறந்து வைத்து, ரூ. 63 கோடி 74 ஆயிரம் மதிப்பிலான 46 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா் என தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுனாமி 21 ஆம் ஆண்டு நினைவு நாள்: கடலூரில் கடலில் பால் ஊற்றி, மலர்தூவி மீனவர்கள் கண்ணீர் அஞ்சலி!

அந்தக் கட்சிக்கு அழிவுகாலத்தை உண்டாக்கும்... யாரைச் சொல்கிறார் பிரேமலதா!

ஏழுமலையான் லட்டு விற்பனை மையத்தில் லட்டு தரம்,வசதிகள் குறித்து பக்தர்களிடம் கருத்து சேகரிப்பு!

திருமலையில் கூட்டம்: ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் 3 நாள்களுக்கு ரத்து!

முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட அரசாணை!

SCROLL FOR NEXT