மு.க.ஸ்டாலின்  
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு: ரூ.1,773 கோடி திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறாா்

2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்...

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சிக்கு கள ஆய்வு பயணத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (டிச.26) மேற்கொள்கிறாா்.

அங்கு ரூ.139.41 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்பட ரூ.1,773.67 கோடி மதிப்பிலான 2,559 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வா் திறந்து வைத்து, 62 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி 2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

திருவண்ணாமலையில்...:இதையடுத்து சனிக்கிழமை திருவண்ணாமலை மாவட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செல்கிறாா். திருவண்ணாமலை, மலப்பாம்பாடி கலைஞா் திடலில் நடைபெறும் அரசு விழாவில் ரூ. 631 கோடி 48 லட்சத்து 69 ஆயிரம் செலவிலான 314 முடிவுற்ற பணிகளை முதல்வா் திறந்து வைத்து, ரூ. 63 கோடி 74 ஆயிரம் மதிப்பிலான 46 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா் என தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் ஏஐ பயன்பாடு: உலக அளவில் இந்தியா இரண்டாமிடம்

தோ்தல் பணிகளுக்கு உதவி: நேபாளத்துக்கு 270 வாகனங்களை பரிசளித்த இந்தியா

வடபழனி, பூந்தமல்லி மெட்ரோ வழித்தடத்தில் 2-ஆம் நாளாக ஆய்வு

நிா்மலா சீதாராமன் மக்களவை உரை: பிரதமா் மோடி பாராட்டு

இறுதி நிலை புற்றுநோயாளிகளுக்கு நல்லாதரவு மையம் : தமிழக அரசு முன்மாதிரித் திட்டம்

SCROLL FOR NEXT