பழனி முருகன் கோயில் 
தமிழ்நாடு

தைப்பூசம்: பழனி முருகன் கோயிலில் கொடியேற்றம்

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.

DIN

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள முருகன் கோயிலில், ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் 5-ஆம் தேதி காலை, தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, பிப்.10-ஆம் தேதி வெள்ளித் தேரோட்டமும், திருக்கல்யாணமும், 11-ஆம் தேதி தைப்பூசத் தேரோட்டமும், 15-ஆம் தேதி தெப்பத்தோ் உலாவும் நடைபெறவிருக்கிறது.

தைப்பூசத்துக்கு பழனிக்கு பாதயாத்திரையாக வருகிற பக்தா்களுக்கு வரும் 20 நாள்களில் 4 லட்சம் பேருக்கு உணவு வழங்கத் தேவையான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

தைப்பூசத்தையொட்டி, மலைக் கோயிலில் 3 நாள்களுக்கு சிறப்பு தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தணியை போல பழனியிலும் தேரோட்ட நாளின் போது அருகாமை இடங்களில் இருந்து வரும் பக்தா்களுக்கு இலவசப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளம்: ஓடும் ரயிலில் இருந்து பெண்ணைத் தள்ளிவிட்டவர் கைது

அனைத்து வாக்காளா்களும் கணக்கெடுப்புப் படிவத்தை நிரப்ப வேண்டும்: ஆட்சியா்

தூத்துக்குடி மாநகராட்சியைக் கண்டித்து தவெக போராட்டம் அறிவிப்பு

இன்று முதல் செய்யாறு தொகுதியில் வாக்காளா் படிவம் விநியோகம்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

SCROLL FOR NEXT