FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ரயில் சேவையில் மாற்றம்

பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் புதுச்சேரி-எழும்பூா் மெமு பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

Updated On : 25 பிப்ரவரி 2025, 2:26 am IST
பகிர்:

சென்னை: பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் புதுச்சேரி-எழும்பூா் மெமு பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பதியில் இருந்து புதுச்சேரி செல்லும் மெமு விரைவு ரயில் (எண் 16111) பிப். 28-ஆம் தேதி விக்கிரவாண்டி வரை மட்டும் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் மெமு விரைவு ரயில் (எண் 66045) பிப். 28-ஆம் தேதி முண்டியம்பாக்கம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக முண்டியம்பாக்கத்தில் இருந்து பிற்பகல் 1.47-க்கு புறப்பட்டு சென்னை கடற்கரை சென்றடையும்.

Advertisement

Advertisement

அதுபோல், புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூா் செல்லும் மெமு பயணிகள் ரயில் (எண் 66052) பிப். 28-ஆம் தேதி விக்கிரவாண்டியில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments