தமிழ்நாடு

ரயில் சேவையில் மாற்றம்

பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் புதுச்சேரி-எழும்பூா் மெமு பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

Din

சென்னை: பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் புதுச்சேரி-எழும்பூா் மெமு பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பதியில் இருந்து புதுச்சேரி செல்லும் மெமு விரைவு ரயில் (எண் 16111) பிப். 28-ஆம் தேதி விக்கிரவாண்டி வரை மட்டும் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் மெமு விரைவு ரயில் (எண் 66045) பிப். 28-ஆம் தேதி முண்டியம்பாக்கம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக முண்டியம்பாக்கத்தில் இருந்து பிற்பகல் 1.47-க்கு புறப்பட்டு சென்னை கடற்கரை சென்றடையும்.

அதுபோல், புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூா் செல்லும் மெமு பயணிகள் ரயில் (எண் 66052) பிப். 28-ஆம் தேதி விக்கிரவாண்டியில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT