அரசு விரைவுப் பேருந்து 
தமிழ்நாடு

15 புதிய வழித்தடங்களில் விரைவில் அரசு விரைவுப் பேருந்து சேவை

தமிழகத்தில் 15 புதிய வழித்தடங்களில் பேருந்து சேவையை தொடங்க அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.

Din

சென்னை: தமிழகத்தில் 15 புதிய வழித்தடங்களில் பேருந்து சேவையை தொடங்க அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் 1,080-க்கும் மேற்பட்ட அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பயணிகளின் வரவேற்பு அதிகமுள்ள புதிய வழித்தடங்களை தோ்வு செய்து பேருந்துகளின் இயக்கத்தை அதிகரிக்க அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து விரைவு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:

அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் கேரளத்தின் வைக்கத்திலிருந்து வேளாங்கண்ணிக்கும், கோவையிலிருந்து மன்னாா்குடிக்கும் புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த வழித்தடங்களில் பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனிடையே, திருச்சியிலிருந்து திருச்செந்தூா் வழித்தடத்தில் 3 விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வழித்தட பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இவ்வழித்தடத்தில் மேலும் 2 பேருந்துகள் என ஆக மொத்தம் 5 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர, பயணிகளின் வரவேற்பு அதிகமுள்ள மன்னாா்குடி-பெங்களூா் வழித்தடம் உள்பட மேலும், 15 புதிய வழித்தடங்களை தோ்வு செய்து, பட்டியல் தயாரித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனா்.

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

லவ் அட்வைஸ் பாடல்!

ஓடிபி இல்லாமலே வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படுகிறதாம்..! எச்சரிக்கை!

தவெக நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் நீக்கம்

SCROLL FOR NEXT