மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மாற்றம்!
மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்
மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம்
முன்னதாக மயிலாடுதுறை சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவத்தில் மகாபாரதியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அவரின் இந்த பேச்சுக்கு பலத்தரப்பிலும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மகாபாரதி மாற்றப்பட்டுள்ளார்.