ஜன.15 நெட் தேர்வு நடைபெறாது - யுஜிசி அறிவிப்பு
மாட்டுப் பொங்கலன்று (ஜன.15) நடைபெறவிருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு...
மாட்டுப்பொங்கல் திருநாளன்று (ஜன.15) நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானிய குழுவால் (யுஜிசி) உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கான ‘நெட்’ தேர்வு, தேசிய தேர்வு முகமையால் (என்டிஏ) கணினி வழியில் கடந்த 3-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், ஜன.15-ஆம் தேதியன்று நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மாற்று தேதியில் நடத்தப்படுமென்றும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை(என்டிஏ) அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
ஜன. 16-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்வு, எவ்வித மாற்றமுமின்றி அதே தேதியில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.