வீராங்கனைகள் தாக்கப்பட்டது வேதனை அளிப்பதாக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பஞ்சாபில் தமிழக கபடி விளையாட்டு வீராங்கனைகள் தாக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது.. அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் தமிழக அரசு உடனே செய்ய வேண்டும்.. காயமடைந்த வீராங்கனைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்...
அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.. பிரச்சனைகள் என்ன என்று கண்டறிந்து அவர்கள் சென்றிருக்கும் பணி சிறப்பாக அமைய பக்கபலமாக இருந்து அவர்கள் பத்திரமாக திரும்புவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்...இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாபில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கபடி போட்டியின்போது தமிழ்நாடு வீரங்கனைகள் மீது தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியானது. இதுதொடர்பான விடியோக்களும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு பலர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.