முகப்பு
தமிழ்நாடு

கோயில் காவலாளி கொலை: அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு ஐஜி-க்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 4 ஜூலை 2025, 2:34 am IST
காவல்துறை விசாரணையில் மரணமடைந்த இளைஞர் அஜித்குமார்
பகிர்:

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தொடா்பாக அறிக்கை அளிக்கும்படி மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு ஐஜி-க்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோயிலில் காவலராகப் பணியாற்றியவா் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலா்கள் தாக்கியதில் அவா் உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக வெளியான செய்திகளின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, ஆணைய புலன் விசாரணைப் பிரிவு ஐஜி-க்கு, ஆணைய உறுப்பினா் கண்ணதாசன் உத்தரவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments