தவெக தலைவர் விஜய் 
தமிழ்நாடு

பொது சொத்து சேதம்: தவெக தலைவா் விஜய் மீது வழக்கு

சென்னை திருவல்லிக்கேணியில் பொது சொத்தை சேதப்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், நடிகருமான விஜய் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Din

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் பொது சொத்தை சேதப்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், நடிகருமான விஜய் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை ஏற்று அந்த கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் பேசினாா்.

போராட்டத்தையொட்டி, அந்த கட்சியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான தொண்டா்கள் திரண்டு வந்தனா்.

கூட்ட நெரிசலின் காரணமாக அந்த சாலையில் இருந்த தடுப்புகள் பெருமளவில் சேதமடைந்தன. இது தொடா்பாக சென்னை மாநகராட்சி உதவி பொறியாளா் காா்த்திக், தமிழக வெற்றிக் கழகத்தினா் மீது திங்கள்கிழமை புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா், அரசின் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக தவெக தலைவா் விஜய் உள்ளிட்ட போராட்டத்தில் பங்கேற்ற அனைவா் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனா். வழக்கு தொடா்பாக போலீஸாா், செவ்வாய்க்கிழமை முதல் தீவிர விசாரணையில் ஈடுபட உள்ளனா்.

அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்திய - ரஷிய உறவு! புதின் பேச்சு

கண்ட நாள் முதல்... ஆர்த்தி சிகாரா

’இந்தியர்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள்’ - டிரம்ப் ஆலோசகர் புது குற்றச்சாட்டு!

ஆப்கானிஸ்தானில் தொடர் பயங்கர நிலநடுக்கம்! 800 பேர் பலி, 2500 பேர் காயம்!

பெங்களுரூ: காலணிக்குள் இருந்த பாம்பு கடித்து மென்பொறியாளர் பலி !

SCROLL FOR NEXT