இணையதளங்களில் பகிரப்படும் அந்தரங்க விடியோக்களை அகற்ற வழிகாட்டு நெறிமுறை: உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
ஆபாச தளங்களில் பெண்களின் விடியோக்களை நீக்குவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள்...
இணையதளங்களில் பகிரப்படும் பெண்களின் அந்தரங்க விடியோ மற்றும் புகைப்படங்களை அகற்றுவது தொடா்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வருவதாக மத்திய அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், பெண் வழக்குரைஞா் ஒருவா் இணையதளங்களில் பகிரப்பட்டுள்ள தனது அந்தரங்க விடியோக்களை அகற்ற உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபுடுகுமாா் ராஜரத்தினம், பாதிக்கப்பட்ட பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோ மற்றும் புகைப்படங்கள் 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது 6 தளங்களில் இருந்து மட்டும் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. எனவே, அவற்றையும் அகற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டாா்.
Advertisement
Advertisement
அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான, மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ வழக்குகள் மட்டுமன்றி, பெண்களுக்கு எதிரான அனைத்து பாலியல் துன்புறுத்தல் வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவா்களின் அடையாளங்களை மறைத்து, வழக்கு ஆவணங்களைத் தாக்கல் செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயா் உள்ளிட்ட விவரங்கள் முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட வழக்கு ஆவணங்களில் இருந்து நீக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்தாா்.
அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் குமரகுரு, இணைய குற்றத் தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்கள் நேரடியாக தங்களின் விடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்றுவது தொடா்பாக சம்பந்தப்பட்ட துறையை எளிதில் அணுகும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்து வருகிறது என்று தெரிவித்தாா்.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இதுதொடா்பான மத்திய அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆக.5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
The central government has announced that guidelines are being formulated regarding the removal of intimate images and videos of women on websites.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.